உலகின் வல்லரசு நாடுகள் பல இரு அணியாக பிரிந்து நடத்திய இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்து 75 வது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி ரஷ்யா பெற்ற வெற்றிய நினைவு கூற வெற்றி தினமாக இதை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தையொட்டி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா விருது வழங்கி கவுரவித்தது. அதாவது, இரண்டாம் உலகப்போர் 1939-ம் ஆண்டு தொடங்கி 1945ஆம் ஆண்டு முடிந்தது. இந்த போரின் போது வடகொரியாவில் ஏராளமான ரஷ்ய வீரர்கள் பலியாயினர். வடகொரியா மண்ணில் பலியான தங்கள் நாட்டு வீரர்களை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு ரஷ்யா உரிய விருதினை வழங்க முடிவு செய்தது. இதனையடுத்து வடகொரியா தலைநகர் பியாங்யாங்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில், வடகொரியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் பங்கேற்று அந்த விருதினை வடகொரிய அதிபருக்கு வழங்கினார். அதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரி சாங் ஹூவான் அந்த விருதை பெற்றுக்கொண்டார்
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…