கிரேக்க தீவான கிரீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று காலை தெற்கு கிரேக்க தீவான கிரீட் தீவில் 5.8 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 9:17 மணிக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் தென்கிழக்கில் 246 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி உள்ளனர். இதன் பின்னர் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், த்ராப்சானோ கிராமத்திற்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் அளித்துள்ளது.
இதன் பின்னர் கிரேக்க அதிகாரிகளின் அறிக்கை படி, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தீவின் கிழக்குப் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள பழைய கல் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…