குடமுழுக்கு காணும் பெரியகோவில் என்னென்ன யாகசாலை பூஜைகள்!?

Published by
kavitha
  • 23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரிய கோவில்
  • இன்று கும்பாபிஷேகம் காண உள்ள நிலையில் தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள்

இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று  காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.

பெரியகோவிலில் இவ்விழாவானது ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கிய நிலையில்  தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதன்பின் பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும் அதே நாள் மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்று வந்தன.பெரியகோவிலே மந்திர ஒலிகள் எங்கும் எதிரொலித்தன.இந்த பூஜைகளத் தொடர்ந்து இன்று  அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜையான ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி ஆகியவை நடைபெறும்

அதன் பின்னா் சரியாக காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி நடைபெற்று  7.25 மணிக்கு எல்லாம் திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கும்.இதைத்தொடா்ந்து கச்சிதமாக காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு  குடமுழுக்கு நடைபெறுகிறது.10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்று, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதே போல் மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும் இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளிகிறார்.குடமுழுக்கு பற்றி கேட்பதே புண்ணியம் என்றால் அதில் கலந்து கொள்வதும் அதனை காண்பதும் அதை விட புண்ணியம்.23 ஆண்டுகள் கழித்து குடமுழுக்கு காண்கிறது தஞ்சை அதில் பங்குகொண்டு இறை தரிசனம் பெறுவது எத்தனை புண்ணியம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி….எல்லாம் அவன் அருள் அவனை வணங்கி வளம் பெறுவோம்..

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

6 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

8 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

9 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

10 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

10 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago