முக்கியச் செய்திகள்

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா..! கண்டுபிடித்து தகவல் அனுப்பிய லேண்டர்.!

Published by
செந்தில்குமார்

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, விக்ரம் லேண்டரில் இருக்கக்கூடிய RAMBHA-LP ஆய்வு கருவி, இதுவரை செய்திருக்கக்கூடிய முதற்கட்ட ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “சந்திரயான்-3 லேண்டரில் உள்ள ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர் – லாங்முயர் ஆய்வு (RAMBHA-LP) பேலோட் ஆனது தென் துருவப் பகுதியில் நிலவின் பிளாஸ்மா சூழலை முதன்முதலில் அளவீடு செய்துள்ளது.”

“ஆரம்ப மதிப்பீடு சந்திர மேற்பரப்புக்கு அருகில் உள்ள பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இந்த அளவு அளவீடுகள் சந்திர பிளாஸ்மா ரேடியோ அலை தகவல்தொடர்புகளில் அறிமுகப்படுத்தும் இரைச்சலைத் தணிக்க உதவும். மேலும், வரவிருக்கும் சந்திர பார்வையாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுக்கு அவர்கள் பங்களிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையில், “நிலவின் தென் துருவப் பகுதியின் மேற்பரப்பிற்கு அருகே பிளாஸ்மா அயனிகள் இருப்பதாக RAMBHA-LP பேலோட் கண்டறிந்து முதல் இடநிலை அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திர மேற்பரப்பை உள்ளடக்கிய பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் எலக்ட்ரான்கள் வரையிலான அடர்த்தியைக் கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

9 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

10 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

11 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

11 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

12 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

13 hours ago