ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லை என்றும், குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் நீங்கள் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல கோயில்களில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் காசு கொடுங்கள். ஏனெனில் அவையாவும் பராமரிக்கப்படுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த பேச்சிற்கு பல நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்திற்கு எதிராக பேசியதாக கூறி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஜோதிகா அவர்கள் எந்த மதத்திற்கும் ஆதரவாக பேசவில்லை என்றும், பள்ளி, மருத்துவமனைகளுக்கும் கோவிலுக்கு நிதியுதவி வழங்கி பராமரிப்பதை போன்று அதற்கும் நிதியுதவி வழங்கி பராமரியுங்கள் என்று தான் கூறினார் என்றும் அவருக்கு ஆதரவாக பேசி விளக்கமளித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா புகார் கூறிய அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் சங்க ஒருவரை பாம்பு ஒன்று தீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரான கோவிந்தராவ் உத்தரவின் பேரில் அந்த அரசு மருத்துவமனையை ஜேஸிபி மூலம் சுத்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மருத்துவமனை வளாகத்தில் சுமார் பத்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். அவற்றுள் 5பாம்புகள் கொடூர விஷத்தன்மை கொண்டது என்பது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இந்த செய்தியை கேட்டதும் அச்சத்தில் உள்ளாகியுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…