கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான உக்ரேனியாவில் மரியா காமினினா என்ற 19 வயதுடைய இளம்பெண்ணும் எவெலினா லிசென்கோ என்ற 16 வயதுடைய இளம்பெண்ணும் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் சென்றுள்ளனர்.
இவர்களின் பெற்றோர் என்று சென்று தேடினாலும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றிருந்த இருவரும் வாடகைக்கு தங்கிருந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.அப்போது அலமாரியை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த அலமாரிக்குள் இருந்த மூட்டைக்குள் கட்டிவைக்கப்பட்ட உடல் அழுகிய நிலையில் இருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இருவரின் உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர்த்து வைத்து டேப்பின் மூலம் உடல் முழுவதும் சுற்றிவைக்கப்பட்டிருந்துள்ளது.
இருவரின் கைகளிலும் கைவிலங்கு போடப்பட்டிருந்துள்ளது.இருவரின் உடல் முழுவதும் கத்தி குத்து காயங்கள் இருந்தமையால் கொள்ளைக்கும்பலால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேமடைவதாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாக கொலை செய்து கொள்ளை அடிக்கும் ஒரு தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…