பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அதில் மாதவன், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோனா பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருப்பதாகவும், இதனை சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மல்லேஸ்வரியாக நடிக்க பிரபல ஹீரோயின்களான நயன்தாரா, திரிஷா மற்றும் அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது கர்ணம் மல்லேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங்கை தேர்வு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கர்ணம் மல்லேஸ்வரியின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கருதுவதாகவும், அதனாலேயே படக்குழுவினர் அவரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார் .ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…