கர்ப்பமாவதை தள்ளிப்போடுங்கள் – இளம் தம்பதிகளுக்கு வேண்டுகோள் விடுத்த நாடு!

Published by
Rebekal

உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையில் கர்ப்பமாவதை தள்ளிப் போடுமாறு இளம் தம்பதிகளுக்கு பிரேசில் அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்தியாவில் தற்பொழுது கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற பல நாடுகளில் உருமாறிய கொரோனாவால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பிரேசிலில் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் இன்றி அந்நாடு திணறி வருகிறது.

இந்நிலையில், கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வரும் பொழுது அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகளும் கொரோனா  பாதிப்பால் உயிரிழக்கும் கோர சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை அங்கு கொரோனவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பிரேசிலில்  உயிரிழந்துள்ள நிலையில், தினமும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர்.

குறிப்பாக கருவுற்ற சில நாட்களிலேயே பெண்கள் கொரோனவால்  பாதிக்கப்படுகின்றனராம். ஏற்கனவே மருத்துவமனைகள் முழுவதிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் சூழலில் கர்ப்பிணிகளும் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதால் உருமாறிய கொரோனாவின் வீரியம் குறையும் வரையிலும் இளம் தம்பதிகள் கருவுறுதலை தள்ளிப் போடுமாறு பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா: “இனிமே பிரியாணி தான்”..சிறுவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர்!

கேரளா : மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி இடம்பெற்றுள்ளது.…

45 minutes ago

இந்த மகுடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்! ஆர்சிபிக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

அகமதாபாத் : எப்போது இந்த கனவு நிறைவேறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை…

2 hours ago

“அடுத்த சீசன் கோப்பை எங்களுக்கு”…தோல்விக்கு பின் வேதனையுடன் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர்!

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது. நடப்பாண்டு…

3 hours ago

கோப்பை பெங்களூருக்கு வர வேண்டும் என்பது எனது கனவு…முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா எமோஷனல்!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள்…

3 hours ago

இன்று பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் கட்டமாக பரிசு வழங்குகிறார் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த…

4 hours ago

நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!

நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger)…

4 hours ago