நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார்.
நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன நடக்கிறது? என் பின்னால் உள்ள பொருட்கள் நகர்கிறதா? இங்கு லேசான நிலநடுக்கத்தை நாம் உணர்கிறோம்” என கூறினார். அதற்க்கு நிகழ்ச்சி தொகுப்பாளர் “ஆம், ஆம், நிலநடுக்கத்தால் நாடாளுமன்ற வளாகமே குலுங்குகிறது. உங்களுக்கு ஏதும் ஆபத்து இல்லையே. நலமாகத்தான இருக்கிறீர்கள்” என கேட்டார் மேலும், “பேட்டியை தொடர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு பிரதமர் ஜெசிந்தா, சிரித்தபடியே “பேட்டியை தொடரலாம்” என கூறினார். அந்த நிலநடுக்கத்துக்கு மத்தியிலும், அவர் அந்த நேரலையை முழுமையாக முடித்தார்.
இந்நிலையில், வெலிங்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 5.6 புள்ளிகளாக பதிவானது. மேலும் அந்த நிலநடுக்கத்தினால் பெரியளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…