12 வருடங்களுக்கு பிறகு நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ என்ற தமிழ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதனையடுத்து பல தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த இவர் கடைசியாக தமிழில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘சாருலதா’ என்ற படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தெலுங்கு படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தற்போது அசுரன் படத்தின் ரீமேக்கான நாரப்பா படத்திலும், இந்தியில் மைதானம், தெலுங்கில் விராட்ட பர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு பிறகு ஒரு திரில்லர் கலந்த தமிழ் படத்தில் களமிறங்கவுள்ளார். ‘கொட்டேஷன் கேங்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விவேக் இயக்கவுள்ளார். இவர் அருண்விஜய்யின் பாக்ஸர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காயத்ரி ரெட்டி தயாரிக்கும் இந்த படத்தில் பிரியாணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், பிரியாமணி ஒப்பந்தத்தின் பெயரில் கொலைகளை செய்பவராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படம் மும்பையின் தாராவியில் படமாக்கவுள்ளதாகவும், இது கேரளாவை சேர்ந்த ஒரு நிஜ கும்பலால் ஈர்க்கப்பட்ட படம் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…