சிம்புவின் மாநாடு படத்தினை குறித்த அப்டேட்களை கேட்டவர்களுக்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அரசு அனுமதி அளித்தவுடன் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ் ஜே. சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் பிப்ரவரி மாதம் முதல் நடந்து வந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஊரடங்கில் பல படங்களின் அப்டேட்களும் வெளியாகிய நிலையில் சிம்புவின் மாநாடு படம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த சிம்பு ரசிகர்கள் தயாரிப்பாளரிடம் மாநாடு படம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலளித்துள்ளார். அதில் அனைவரும் மாநாடு படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர்.தற்போது அனைத்து சினிமாயுலகமும் அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அரசு பச்சை கொடி காட்டிய அடுத்த தினத்திலிருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…