இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று இயக்குனர் ஷங்கர் மனு செய்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இந்தியன் – 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் இயக்குநர் ஷங்கர் “லைகா நிறுவனம் பல உண்மைத் தகவல்களை மறைத்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. முதன் முதலாக இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன்வந்தார், ஆனால் அதற்கு பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது.
ரூ. 270 கோடி படத்தைத் தயாரிக்க செலவாகும் என பட்ஜெட் போடப்பட்டது, அதை லைக்கா நிறுவனம் ஏற்று பட்ஜெட்டை ரூ.250 கோடியாகக் குறைத்தும், படப்பிடிப்பைத் தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது. தில்ராஜு படத்தைத் தயாரித்திருந்தால் இந்தியன் 2 திரைப்படம் ஏற்கெனவே வெளியாகியிருக்கும்.
நிதி ஒதுக்கீட்டில் தாமதம் மற்றும் அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.
லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…