புரோட்டின் சத்து நிறைந்த பருப்பு புட்டு…. எப்படி செய்வது தெரியுமா?

Published by
Rebekal

மாலை நேரத்தில் தேநீர் அருந்தும் போது உங்கள் குழந்தைகளுக்கு சுவையாகவும் சத்தாகவும் உள்ள ஒரு ரெசிபி செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் பருப்பு புட்டை செய்து கொடுங்கள். அதிக புரோட்டீன் கொண்ட இந்த பருப்பு புட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பருப்பு புட்டை  எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு
  • கடலைப்பருப்பு
  • பாசிப்பருப்பு
  • புழுங்கல் அரிசி
  • உப்பு
  • சர்க்கரை
  • ஏலக்காய்த்தூள்
  • முந்திரி
  • தேங்காய்
  • நெய்

செய்முறை

முதலில் அனைத்து பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை சேர்த்து 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அவற்றை நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி இட்லி மாவு பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி அரைத்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் வேகவத்த பருப்பை எடுத்து புட்டு போல உதிர்த்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள புட்டை நெய் வறுத்த முந்திரியுடன் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சர்க்கரை பாகு ஏலக்காய் பவுடர் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால் அட்டகாசமான பருப்புக் புட்டு வீட்டிலேயே தயார். நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இதைச் செய்து கொடுத்துப் பாருங்கள்.

Published by
Rebekal

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

25 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

1 hour ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

4 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

4 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

5 hours ago