கதறி அழுத குடும்பத்திற்கு உதவ அரசிடம் வேண்டுகோள் விடுத்த ராகவா லாரன்ஸ்.!

Published by
Ragi

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் பலர் இந்த ஊரடங்கால் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் வேலைக்கு சென்ற தமிழ் குடும்பம் ஒன்று தாங்கள் இரண்டு மாதங்களாக பசியால் வாடுவதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க காசு இல்லை என்றும், வெளியே சென்றால் போலீஸ்காரர்கள் அடிப்பதாகவும், எனவே தமிழகத்திற்கு எங்களை கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை சுட்டி காட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்  இவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், என்னுடைய தரப்பிலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த நிலையில் தற்போது குஜராத்தில் உள்ள ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழகத்திற்கு செல்ல விரும்பினால் குஜராத் அரசு அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கு ராகவா லாரன்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜ்கோட் கலெக்டருக்கும், குஜராத் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்ததோடு, அந்த குடும்பம் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

48 minutes ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

2 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

3 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

3 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

5 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

6 hours ago