ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!

Published by
Ragi

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி.

உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துப்பரவு பணியாளர்களுக்க்காக ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார். மேலும் சென்னையில் உள்ள செங்கல்பேட்டை விநியோகஸ்தர்களின் சங்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு ரூ. 15 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் தென்னிந்தியா நடிகர் சங்கத்திற்கு மீண்டும் ரூ. 25 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள ராயபுரம் மக்களுக்கு ஏற்கனவே ரூ. 75லட்சத்தை நிதியுதவியாக வழங்கியிருந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.  மாற்றுத் திறனாளிகளான 50பேருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.  அடுத்ததாக ரூ. 50 லட்சத்தை அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார்.

ஆனால் தற்போதும் அவருக்கு அழைப்புகள், வீடியோக்கள் வருவதாகவும், அவர்களுக்கு தேவை பணம் இல்லை சாப்பிடுவதற்கு தேவையான அரசி தான். சாப்பாடு இல்லாமல் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பலர் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். இதை என் குடும்பத்திடமும், நண்பர்களிடமும் பகிர்ந்த போது எனது சகோதரர் எல்வின் ஐடியா ஒன்றை கூறினார். ஒருவரால் மட்டும் உதவி செய்ய முடியாது, எனவே உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் அனைவரிடமும் கூறி நிதி திரட்டுவோம் என்று கூறினார். அதன்படி முதலாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இதை கூறியதும் அவர் இந்த முயற்சிக்காக பாராட்டுகளை தெரிவித்தோடு, 100பை அரசி மூட்டைகளையும் கொடுத்து உதவியுள்ளார். அதனையடுத்து தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க கோரி கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா மற்றும் பல நடிகர்களின் ரசிகர்களிடமும், அரசியல்வாதிகளிடமும், மக்களிடமும் கேட்டு கொண்டோம். நீங்கள் தரும் சிறிய தொகை கூட பல ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

4 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

5 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

5 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

7 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

7 hours ago