சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து இப்பட பாடல்கள் நேற்று வெளியானது.
அந்நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் எப்படி, எப்போது சென்னை வந்தேன் என்ற சுவாரஸ்ய சம்பவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் எனது குடும்பத்தார் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில வழி கல்விக்கு மாற்றினார்கள். அந்த ஆங்கில வழிக்கல்வி கஷ்டமாக இருந்ததால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை.
அதன்பிறகு அடுத்த வருடம் எழுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். உடனே மேற்படிப்பிற்காக நல்ல வசதியான கல்லூரியில் என்னை சேர்த்தார்கள். நான் ஒழுங்காக படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். தேர்வு நாள் நெருங்கியது தேர்வு கட்டணத்தை செலுத்த 170 ரூபாய் குடும்பத்தார் எனக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நான் தேர்வு எழுதினால் எப்படியும் தேர்ச்சி பெற மாட்டேன் எனக்கு தெரியும். அதனால் அந்த 170 ரூபாயை கொண்டு பெங்களூர் ரயில் நிலையம் வந்து ரயில் ஏறினேன். அந்த ரயில் சென்னை வந்தடைந்தது.
அப்போது எனது டிக்கெட் காணாமல் போனது. ரயில் நிலையத்திலிருந்த டிக்கெட் பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டார். நான் டிக்கெட் எடுத்தேன் ஆனால் அது தொலைந்து விட்டது என கூறினேன் அவர் நம்பவில்லை உடனே அருகிலிருந்த சென்னை கூலி தொழிலாளிகள் அந்த பையன் முகத்தை பார்த்தால் பொய் சொல்வது போல தெரியவில்லை. அவன் கண்டிப்பாக டிக்கெட் எடுத்திருப்பான். என எனக்காக அவர்கள் அபராதம் கட்டினார். அந்த கணமே மெட்ராஸ் தான் எனது சொந்த ஊர் என முடிவு செய்தேன். இங்கேயே வேலை செய்ய தொடங்கினேன். என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் சென்னை வந்த பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…