ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
7 தமிழர் விடுதலை முழக்கம்:
பல்வேறு அரசியல் கட்சினர் விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் கீழ் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்:
தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது.
நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட்:
நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.
நடிகர் ஆர்யா ட்வீட்:
நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்.சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.
இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட்:
சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.
முதல்வருக்கு சமுத்திரக்கனி கோரிக்கை:
அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.
“ஒருபோதும் குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை;
தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்” எங்கள் கோரிக்கை முதல்வர் மற்றும் ஆளுநர் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இயக்குநர் ராஜுமுருகன் ட்வீட்:
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தாமதம் எதற்கு.? முதல்வரே… ஆளுநரே… அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் என்ற, உடல் நலிவுற்றுக்கொண்டிருக்கும் நிரபராதி மகனுக்கான நீதியை விடுதலையை உடனே சாத்தியப்படுத்துங்கள்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…