வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
அதனையடுத்து அண்மையில் தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து வருகிறார். ஆம் இந்தியில் மைதான் என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி, ஏற்கனவே தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதீத் என்ற உணர்வுமிக்க வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.
இறந்து போனதாக கூறப்பட்ட ராணுவ அதிகாரி ஒருவர் 10 வருடங்கள் கழித்து மீண்டும் மனைவி, மகளுடன் இணைந்து புதிய வாழ்க்கை வாழ வருகிறார். இவர் இறந்ததாக கூறப்பட்டதற்கு காரணம் என்ன, அப்போது அவரது குடும்பத்தின் நிலை என்ன இது தான் கதை. இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…