மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தர தயார் -அமைச்சர் கடம்பூர் ராஜு.!

Published by
Ragi

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் தர தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் மாஸ்டர் படத்தினை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் வாங்கியுள்ள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

அதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக முதல் திரையரங்குகளில் தான் வெளியாகும் ,அதாவது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தினை தியேட்டரில் வெளியிட உள்ளதாகவும் ,அதன் பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் மாஸ்டர் படக்குழுவினர் தெரிவித்தனர் .

மேலும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ஜனவரி 13-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.அப்போது திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது .கொரோனா அச்சம் காரணமாக 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டும் தியேட்டரில் கூட்டம் இல்லை .எனவே மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் போது 50% பார்வையாளர்களுக்கு பதிலாக 75% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாஸ்டர் படக்குழுவினர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார்.அவர் கூறியதாவது ,பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி தர கோரி வேண்டுகோள் விடுத்தால் அரசு பரிசீலனை செய்து அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

6 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

9 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago