மீண்டும் நம்மை பயமுறுத்தி மிரட்ட ரெடியாகும் ‘அரண்மனை 3’.!

Published by
பால முருகன்

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.சமீபத்தில் இந்த படத்தில் பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் ஒரு பாடலை பாடியுள்ளதுடன்,இந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளதாகவும் அரண்மனை 3 படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் அரண்மனை 3 படமானது எப்போது மிரட்ட வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதாவது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 திரைப்படமானது வரும் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.விரைவில் அரண்மனை 3 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Published by
பால முருகன்
Tags: aranmanai 3

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

13 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

14 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

16 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

16 hours ago