டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
சினிமா உலகில் ஆஸ்கர் விருது மிக உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. அதுவும், ஹாலிவுட்டில் சினிமாவில் மிக பிரபலம் வாய்ந்தவை. ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கும் விழாவை உலக முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் இருப்பார்கள். இதுவரை ஆஸ்கருக்கான பரிந்துரையில் இடம்பெற வேண்டும் என்றால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எதாவது ஒரு திரையரங்குகளில் குறைந்தது 7 நாட்களுக்கு திரையிடப்பட்டு இருக்க வேண்டும் என்பது விடுமுறையில் உள்ளது. ஆனால், தற்போது உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒருபக்கம் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பலமடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல திரைப்படங்கள் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆஸ்கர் விதிமுறைகளில் சில மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் (OTT) தளங்களில் வெளியிடப்படும் படங்கள் 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்க தகுதி செய்யப்படும் என்று ஆஸ்கர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, உலக முழுவதும் கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு 2021 ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதி பெறும் என்று அந்நாட்டு ஊகங்கள் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…