உக்ரைனில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான கார்கிவ் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கோல்டன் ஹவர் தனியார் பராமரிப்பு இல்லத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனதாக கூறியுள்ளனர். எலக்ட்ரிக் ஹீட்டர்களை கவனக்குறைவாக பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என முதல்கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
நர்சிங் ஹோம் ஆக மாற்றப்பட்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர தீ விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அரசாங்கத்தின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு அரசு ஆணையம் அமைக்கப்பட உள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…