ரியோ ஜெயிப்பது மட்டுமல்ல ஆரி அண்ணா ஜெயித்தாலும், மற்ற போட்டியாளர்கள் ஜெயித்தாலும் எனக்கு சந்தோசம் தான். எனவே யாரையும் தவறாக பேசாதீர்கள் என ரியோவின் மனைவி பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது பிக் பாஸ் இல்லத்தில் ஆரி, ரியோ, ரம்யா, பாலாஜி, சோம், கேபி ஆகிய ஆறு பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஆரிக்கு தான் அதிகளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அதே சமயம் ரியோ ரசிகர்களும் அதிகளவில் தான் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி சமூகவலைதளங்களில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் தகுதியற்றவர் என மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர்.
மேலும் வாக்குப் போடுவது குறித்தும் சில சர்ச்சையான கருத்துக்களும் பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரியோயின் மனைவி ஸ்ருதி அவர்கள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸில் ரியோ ஜெயித்தால் தனக்கு அதிகம் சந்தோசம் தான் எனவும் அதே போல தான் ஆரி அண்ணா ஜெயித்தாலும் நான் சந்தோசப்படுவேன் எனவும் மற்றும் போட்டியாளர்கள் ஜெயித்தாலும் நான் சந்தோஷப்படுவேன் எனவும் கூறிய அவர், இன்னும் சில தினங்களில் எனது உலகம் என் கையில் முழுவதுமாக வந்துவிடும் அதுவே எனது சந்தோசம் என கூறியுள்ளார். மேலும், ரசிகர்களிடம் தயவுசெய்து மற்ற போட்டியாளர்களை பற்றி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…