அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி அடைபவர் ரிஷி கபூர்..! ஷாருக்கானின் உருக்கமான பதிவு..!

Published by
Ragi

நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள் உட்பட பலர் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவரை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இளைஞனாக பயமுறுத்தும் இந்த சினிமா உலகில் நுழைந்த போது என்னை பார்த்த விதம் எனக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் போதுமான திறமைசாலி இல்லையோ என்று பயந்தேன் . தோல்வி என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது இல்லை . ஏனெனில் நான் தோல்வியடைந்தாலும்  மிகப் பெரிய நடிகரான ரிஷிகபூருடன் இணைந்து நடித்திருந்தேன். படப்பிடிப்பின் முதல் நாளில், என்னுடைய சீன் முடிந்து பேக்கப்பிற்காக காத்திருந்த ரிஷிகபூர்,  தனது முகத்தில் அழகான சிரிப்புடன் என்னிடம் வந்து “நீ மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கிறாயே” என்று கூறினார். அன்றே நான் ஒரு நடிகனாக உணர்ந்து விட்டேன். . சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்து என்னை அந்த படத்தில் நடிக்க வைத்ததற்காக நன்றி கூறினேன். அவர் எனக்கு எந்த விதத்தில் உந்துசக்தியாக இருந்தார் என்பது குறித்து அவருக்கே தெரியவில்லை. அடுத்தவர் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளும் மனம் சிலருக்கு மட்டுமே உள்ளது. பல விஷயங்களுக்காக அவரை நான் மிஸ் செய்கிறேன். மிக முக்கியமாக ஒவ்வோரு முறையும் நாங்கள் சந்திக்கும் போதும் என் தலையில் அவர் அன்பான முறையில் தடவி கொடுப்பதே. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கான அவரை என்றும் என் மனதில் வைத்திருப்பேன். எப்போதும் அன்பு, நன்றி, மிகு‌ந்த மரியாதையுடன் உங்களை மிஸ் செய்கிறேன் என்று கூறியுள்ளார்

Published by
Ragi

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago