சீனாவில் பெய்து வரும் மழையால் அதிகரிக்கும் இறப்பு விகிதம்.! நீரை வெளியேற்ற வெடி வைத்து அணை தகர்ப்பு.!

Published by
Ragi

சீனாவில் அதிகரித்து வரும் மழையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வெடி வைத்து அணை தகர்த்தி நீரை வெளியேற்றியுள்ளனர்.

சீனாவின் வலிமையான யாங்சே ஆற்றின் கிளை நதியான சுஹே ஆற்றின் அணையிலுள்ள தண்ணீரை குறைக்க வெடி வைத்து அணை தகர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றியுள்ளனர். இந்தாண்டு பெய்து வரும் மழையால், யாங்சே உட்பட பல நதிகளில் நீர் அளவு வழக்கத்துக்கு மாறாக உயர்ந்துள்ளது.

எனவே மழை நீரை வெளியேற்ற அணையில் வெடி வைத்து நீரை வெளியேற்றியுள்ளனர். கடந்த வாரம் 15 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து யாங்சேயில் உள்ள மூன்று அணைகளின் நீரை  திறந்து விடப்பட்டது. கடந்த வாரம் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வதகவல் படி , ஜூன் மாதத்திலிருந்து 140 -க்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளதாகவும் அல்லது காணாமல் போயுள்ளதாகவும் , 37.89 மில்லியன் பேர்  மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2.24 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெய்து வரும் மழையால் இடம்பெயர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது.

மேலும் ,கடந்த ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் தேசிய ஆய்வகம் மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்தது. ஏனெனில் தொடர்ச்சியான மழை தொடர்ந்து நாட்டின் பரந்த பகுதியில் அழிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. சில பகுதிகளில் 70 மி. மீ-க்கு அதிகமான மழையோ, இடியுடன் கூடிய மழையோ மற்றும் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளம், நிலச்சரிவு குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியதோடு, அபாயகரமான பகுதிகளில் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் மிக மோசமான வெள்ளப்பெருக்கு என்றால் 1998-ல் நடந்தது என்றும், அதில் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடுகள் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

45 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

2 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

2 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

3 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

4 hours ago