இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது காக்கி, கோடியில் ஒருவன் , அக்னி சிறகுகள், மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் ஆண்டனி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த படத்தை விடியும் முன் படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…