மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் வகையில் ,சாலையின் பெயரை அவரது பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத்
கடந்த ஜூன் 14அன்று மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ஒட்டுமொத்த திரையுலகையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மறைந்த சுஷாந்த் சிங் நடித்த கடைசி படமான “Dil Bechaara’ படத்தை டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 24ம் தேதி வெளியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். முகேஷ் சாப்ரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக சஞ்சனா சிங் நடித்திருந்தார் . அண்மையில் அதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது மறைந்த சுஷாந்த் சிங்கிற்கு நினைவு கூறும் வகையில் பீகாரில் உள்ள பூர்னியாவில் உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்று மறுப் பெயரிடப்பட்டுள்ளது.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.சமீபத்தில் மேயர் சவிதா தேவி அளித்த ஒரு ஊடக உரையாடலில், மறைந்த சுஷாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு ரவுண்டானாவில் உள்ள சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்று கூறியிருந்தார்.அதன்படி ஃபோர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சவுக் என்றும் ,மதுபானியிலிருந்து மாதா செல்லும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்றும் மறுப் பெயரிடப்படும் என்று கூறியுள்ளார்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…