ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த மற்றொரு மேஜர் ஜெனரலை கொன்றதாக உக்ரைன் கூறியுள்ளது. மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நடைபெற்ற போரின்போது ரஷ்ய ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் உக்ரைன் படையின் பதிலடி தாக்குதலுக்கு பலியான 2-வது ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ ஆவார். ரஷ்ய இராணுவத்தின் 41-வது படை பிரிவின் தளபதியான ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ மூத்த அதிகாரிகளுடன் உயிரிழந்தார்.
முன்னதாக மார்ச் 3 அன்று, ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார் என உக்ரைன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த போரில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இத்துடன் ரஷ்ய ராணுவத்தின் 290 டாங்கிகள், 999 கவச வாகனங்கள், 46 போர் விமானங்கள் மற்றும் 68 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…