உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய தளபதி உயிரிழப்பு..!

Published by
murugan

ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த மற்றொரு மேஜர் ஜெனரலை கொன்றதாக உக்ரைன் கூறியுள்ளது. மேஜர் ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் நடைபெற்ற போரின்போது ரஷ்ய ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ கொல்லப்பட்டார். ஒரே வாரத்தில் உக்ரைன் படையின் பதிலடி தாக்குதலுக்கு பலியான 2-வது ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ ஆவார். ரஷ்ய இராணுவத்தின் 41-வது படை பிரிவின் தளபதியான ஜெனரல் விட்டாலி ஜெராசிமோ  மூத்த அதிகாரிகளுடன் உயிரிழந்தார்.

முன்னதாக மார்ச் 3 அன்று, ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி உயிரிழந்தார் என உக்ரைன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அதே நேரத்தில், இந்த போரில் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன்  கூறியுள்ளது.

இத்துடன் ரஷ்ய ராணுவத்தின் 290 டாங்கிகள், 999 கவச வாகனங்கள், 46 போர் விமானங்கள் மற்றும் 68 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

59 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

17 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago