சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் எழுத உள்ளதாகவும், இந்த படத்தில் சில்வாவின் மகன்களான கெவின் மற்றும் ஸ்டீவன் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும்,படமானது ஜாக்கிசானின் ‘கராத்தே ஜிட்’ பாணியில் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது .
சமுத்திரக்கனி மற்றும் ஸ்டண்ட் சில்வா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் பூஜா கண்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியின் தங்கை என்பதும் ,இதுவே அவரது முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் இவர் ஏற்கனவே காரா எனும் குறும்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…