உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் அனைத்தையும் நிறுத்துவதாக சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் நிறுவனத்தில் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு $6 மில்லியன் நன்கொடை அளிக்கிறது என்று சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச்.பி., ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யாவில் தங்களது நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக ஊடகங்களுக்கு தடை விதித்தது ரஷ்யா. ராணுவம் பற்றி போலி செய்தி வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் ஒன்றை அறிவித்திருந்தது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…