பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சனம் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகையும் , பிக்பாஸ் சீசன்-4 போட்டியாளருமாக இருந்தவர் சனம் . நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல பெரிய ஆதரவு இல்லாமல் இருந்த சனம் பிக்பாஸ் வீட்டில் தனித்துவமான முறையில் விளையாடிதன் மூலமும்,அவரது நேர்மையான குணத்தாலும் பல கோடி ரசிகர்களின் மனதை வென்றார் . நிகழ்ச்சியின் போது இவர் தனது நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருப்பதை பார்த்தோம் .
அதை கண்ட ஒரு சில ரசிகர்கள் சனமுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.ஏனெனில் நமது கலாச்சாரப்படி திருமணமானவர்கள் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைப்பது வழக்கம்.அந்த வகையில் ரசிகர் ஒருவர் எனக்கு ஒரு சந்தேகம்,சனமிற்கு திருமணம் ஆகிவிட்டதா?ஏன் அவங்க நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சனம் ,இந்த கேள்வியை பலர் கேட்கிறார்கள்.எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை . உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன் விரைவில் இருக்கலாம்.என் வீட்டில் திருமணமானவர்கள் மட்டும் தான் நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க வேண்டும் என்று கூறியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் சனமிற்கு விரைவில் திருமணம் என்று கூறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…