தில்லுக்கு துட்டு 3 குறித்த அப்டேட்டை நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் ராம் பாலா இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டை நடிகர் சந்தானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தில்லுக்கு துட்டு 3 குறித்து கேட்டதற்கு சந்தானம் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. என பதிலளித்துள்ளர்.
மேலும் சந்தானம் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…