தில்லுக்கு துட்டு 3 குறித்த அப்டேட்டை நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் ராம் பாலா இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டை நடிகர் சந்தானம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் தில்லுக்கு துட்டு 3 குறித்து கேட்டதற்கு சந்தானம் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. என பதிலளித்துள்ளர்.
மேலும் சந்தானம் தற்போது சபாபதி மற்றும் மேலும் பெயரிடாத ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிக்கிலோனா திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…