இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அது போல செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கான இரண்டாம் பக்கத்தையும் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது குறித்து செல்வராகவனிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இந்நிலையில் புத்தாண்டில் இயக்குனர் செல்வராகவன் காத்திருந்த ரசிகர்களுக்காக ஆயிரத்தில் ஒருவன் 2 அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனுஷின் ட்விட்டர் கணக்கை இணைத்து ஆயிரத்தில் ஓருவன் 2 படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதே சமயம் தனுஷும் தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்புக்கு ஒருவருடம் எனவும், 2024 இல் வருகிறான் இளவரசன் எனவும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தனுஷ் தான் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார் என உறுதியாகியுள்ளது, இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…