பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி தாய் கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்தார். அதனால் தனக்கும் அதே போன்று நேரிடலாம் என்ற பயத்தில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை கொண்டார்.
அந்த நோயை ஏற்படுத்தும் ஜீன்கள் தன்னுடன் உடலிலும் இருப்பது தெரியவந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்படி அவர் செய்தார். இவரைப்போலவே அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்கள் மார்பகம் மட்டுமல்லாமல் கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்கள் என்னும் கர்ப்பப்பை உடன் தொடர்புடைய பாகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.
இவர்களின் உடலில் புற்றுநோயை உருவாக்கும், BRCA ஜீன் உள்ளதா என கடந்த 2015-ம்ஆண்டு பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அந்த சோதனையின் முடிவுகளில் அவர்கள் ஏழு பேருக்கும் புற்றுநோயை உருவாக்கும் BRCA ஜீன் உள்ளது என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து உடனே 7 பேரும் மார்பகங்கள், கர்ப்பப்பை மற்றும் ஃபாலோபியன் குழாய்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதனால் அனைவரும் பல வேதனைகளை அனுபவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பரிசோதனை செய்து ஆய்வகத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்களை அழைத்து உங்களால் இனி உங்கள் சந்ததிக்கு புற்றுநோய் அபாயம் இல்லை என கூறினார்.
காரணம் உங்கள் பரிசோதனை முடிவுகள் பார்த்ததில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு எதிர்பார்த்தது போல் ஆபத்தான அளவில் இல்லை , இன்னும் சொல்லப் போனால் உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு இல்லை என்று கூட சொல்லலாம்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…