பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிப்பு.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள், இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடுத்துள்ள உருமாறிய கொரோனாவுக்கு IHUB.1.640.2 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா நாடான கேமரூனில் இருந்து மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வேகமாக பரவி வரும் நிலையில், மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்களால் IHUB.1.640.2 என்று பெயர் சூட்டப்பட்ட உருமாறிய கொரோனா 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை கொரோனா பிற நாடுகளில் இந்த வகை கொரோனா இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த புதிய வகை கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…