ஏப்ரல் 14 – ல் சீயான் விக்ரமுடன் மோதவுள்ள சிம்பு!

Published by
Rebekal

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் மாநாடு படமும் அதே தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எந்த படம் வெற்றி பெற்று அதிக வசூல் பெரும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கோப்ரா. இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ள நிலையில், படம் வெளியீடு தேதி ஏப்ரல் 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரக்கூடிய மாநாடு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அவர்கள் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரேம்ஜி, மனோஜ், பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர் ஆகிய பல பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான மோஷன் போஸ்டர் பொங்கலை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாநாடு திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோப்ரா ஏப்ரல் 14 வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நிலையில், எந்த படம் வசூல் அதிகமாக பெற்று, விமர்சனரீதியாக வரவேற்பை பெறப் போகிறது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
Rebekal

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

4 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

20 minutes ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

3 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

3 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

4 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

4 hours ago