நடிகை வரலட்சுமி தனது சேவை அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் வரலட்சுமி. இவர் நடத்தி வரும் சேவ் சக்தி பவுண்டேஷன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரலட்சுமியின் தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் இணைந்து, அவர்கள் ஊருக்கு செல்லும் வரை தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்களையும், தண்ணீர், முககவசம் ஆகியவற்றையும் வழங்கி உதவியுள்ளனர். ஏற்கனவே சேவ் சக்தி அமைப்பின் மூலம் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…