மாநாடு திரைப்படம் இன்னும் 2 மாதங்கள் அல்லது 3 மாதங்களில் வெளியாகும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தாளராக நடிகர் சிம்பு பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவரிடம் மாநாடு படம் குறித்து விஜே ரக்ஷன் கேட்டார்.
அதற்கு பதிலளித்த சிம்பு மாநாடு திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும். விதியசமான கதைகொண்ட அரசியல் படமாக இருக்கும். என்றும் கூறினார். அதன்பிறகு படம் எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு ” இன்னும் 2 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் ஆகும். படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…