நடிகர் சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மென்டல் எனும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.வழக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யும் சிம்பு தற்போது சரியாக அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிம்பு அடுத்ததாக மப்டி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மாநாடு படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு “மென்டல்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ,இதனை டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டதாகவும்,இதனை சிறிய பட்ஜெட் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…