சிங்கப்பூரில் 10 இந்தியர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிங்கப்பூர் அரசு
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்து நாடுகளிலேயும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிங்கப்பூரில், மற்ற வீடுகளுக்கு சென்று பிறரை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தடையை மீறுபவர்களுக்கு, 6 மாதம் வரை ஜெயில் தண்டனை மற்றும் சிங்கப்பூர் டாலர் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண், 2 ஆண்கள் கொண்ட இந்திய குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு ஒரு பெண், 6 ஆண்கள் என 7 இந்தியர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து பேசி தேநீர் குடிப்பதும், படிப்பதுமாக மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த சிங்கப்பூர் போலீசார், 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாங்கள் புதியவர்கள் என்பதால், தங்களுக்கு விதிமுறைகள் தெரியாது என தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…