பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பாடகி ஸ்ரேயா கோஷல் முதன்முதலாக தேவதாஸ் என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், இந்தி, மலையாளம், என பல்வேறு மொழிகளில் தனது இனிமையான குரலால் படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தே வைத்துள்ளார்.
இவரும் ஷிலாதித்யா என்பவரும் காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. மேலும் கடந்த மார்ச் 4 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” இன்று மதியம் கடவுளின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு என்ற நன்றி ” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…