சர் ஜார்ஜ் பிடெல் ஏரி என்பவர் ஆங்கிலேய கணிதவியலரும், வானியலாளரும் ஆவார்.இவர் 1801-ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். இவர் கொல்சேச்டெர் பள்ளியில் பயின்றார்.பிறகு 1819-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1826-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார். 1835 -ஆம் ஆண்டில் இருந்து அரச வானியலாராக 46 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு இங்கிலாந்து அரசக் கழகம் கோப்லே விருதையும் அரசக் கழக விருதையும் (சர்) வழங்கியது. 1827முதல் 1883 வரை இவர் அக்கழகத்தின் தலைவராகவும் விளங்கினார்.
ஏரி கேம்பிரிட்ஜ் வான்காணகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது மேம்படுத்தப்பட்ட வான்கோளக் கிடைவரை நோக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். நோக்கீடுகளை உரிய அளவுகோலில் அடக்கி பதிப்பிக்கும் முறையை உருவாக்கினார்.
1847-ஆம் ஆண்டு நிலா நோக்கீடுகளுக்கான வானுச்சித் தொடுவரை (altazymuth) கருவியை நிறுவினார். 1859 -ஆம் ஆண்டு 33செ.மீ. புவி நடுவரை தொலைநோக்கியையும் புதிய சுழலியக்க வட்டத்தையும் (new transit circle) அமைத்தார். மேலும் 1838-ஆம் ஆண்டு காந்த, வானிலையியல் என்ற புதிய துறை ஒன்றையும் தோற்றுவித்தார்.சூரியக் கரும்புள்ளிகளுக்கான அன்றாடப் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்தினார்.இவர் அமெரிக்கா, கனடா நட்டெல்லையை வகுத்தார். ஒரிகான், கடலோரப் பகுதி எல்லையையும் வகுத்தார். ஜனவரி 2 ஆம் தேதி இன்று இவருக்கு நினைவு நாள் ஆகும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…