அனிருத் சார் ஹீரோவானால் படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சங்கர் இயக்கும் கமலின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுதான் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள அனிருத்தின் முதல் படமாம்.அதனையடுத்து விக்ரம் 60ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் ‘சார் எப்போது ஆனாலும் சரி, என்னைக்கு ஆனாலும் சரி, நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்திற்கு தயாரிப்பாளர் நான் தான் என்றும், நன்றி சார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனும், அவர் ஹீரோவாக நடிக்கும் இயக்குவது நான் தான் என்று தெரிவித்துள்ளார். இது உண்மையாகுமா இல்லையா என்று வருங்காலங்களில் பார்க்கலாம்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…