அனிருத் நடிக்கும் முதல் படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பாராம்.!

Published by
Ragi

அனிருத் சார் ஹீரோவானால் படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சங்கர் இயக்கும் கமலின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார். இதுதான் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள அனிருத்தின் முதல் படமாம்.அதனையடுத்து விக்ரம் 60ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார்.

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு அவரது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமான கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அதில் ‘சார் எப்போது ஆனாலும் சரி, என்னைக்கு ஆனாலும் சரி, நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்திற்கு தயாரிப்பாளர் நான் தான் என்றும், நன்றி சார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனும், அவர் ஹீரோவாக நடிக்கும் இயக்குவது நான் தான் என்று தெரிவித்துள்ளார். இது உண்மையாகுமா இல்லையா என்று வருங்காலங்களில் பார்க்கலாம்.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago