Maaveeran [Image source : file image]
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக மாவீரன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.படம் வெளியான நாளில் இருந்தே, பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு ரூ.30 கோடி, கர்நாடகாவில் ரூ.2.75 கோடி, ஆந்திராவில் ரூ.2.80 கோடி, கேரளாவில் ரூ.0.85 கோடி, மற்ற பகுதிகள்: ₹0.60 கோடி, வெளிநாடு ரூ.11.40 கோடி என வெறும் 4 நாட்களில் உலகளாவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
உலகளவில் முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாள் 28 கோடியும், மூன்றாம் நாளில் 45 கோடியும் நான்காம் நாளில் -50 கோடி என வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஓப்பனிங்கை ‘மாவீரன்’ பெற்றுள்ளதாக வர்த்தக கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மாவீரனுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.
மாவீரன்:
மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, சுனில், சரிதா மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…