கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பாகிஸ்தானின் 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பிரதமர் இம்ரான் கான் விதித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வருவதை அடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 9 அன்று பாகிஸ்தானில் உள்ள 30 நகரங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசாங்கம் விதித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று, கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் இம்ரான் கான், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஸ்மார்ட் லாக்டவுன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளின் அதிகப்படியான சுமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக சுகாதார அமைப்பு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்கு இம்ரான் கான் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனையில் 1500 படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் நோயாளிகளின் வசதிக்காக 1000படுக்கைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237,489 ஆக உயர்ந்துள்ளதாகவும், 4,922 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 140,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…