ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது.
இதனால் பயணிகள் பீதியடையத் தொடங்கினர். திடீரென ஏற்பட்ட கரும்புகை காரணமாக பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் பயணிகளுக்கு ஆக்ஸிஜன் அடங்கிய முகமூடி கொடுக்கப்பட்டு ஆட்டோபெனி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பான வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் ஆட்டோபெனி விமான நிலையத்தில் இருந்து வேறு விமானம் மூலம் பயணிகள் லண்டன் சென்றனர். காலை 6.40 மணிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் இந்த சம்பவம் காரணமாக உள்ளூர் நேரப்படி காலை 10.57 மணிக்கு மாற்று விமானத்துடன் சென்றது.
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…