இதுவரை உலகில் குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த வைரஸ் சீனாவை மட்டுமல்லாது, உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவ தொடங்கி பத்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த வைரஸின் வீரியம் குறைந்த பாடில்லை.
இந்த பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.43 கோடியை கடந்துள்ளது.
இந்நிலையில், உலகில் தற்போது குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ் பரவி இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது, 2019-ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகானின் தொற்று பரவத் துவங்கி இரண்டு மாதங்களிலேயே, முதலாவது மரபணு மாற்றம் ஏற்பட்டதாகவும், கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறி, பெரும்பாலான தொற்றுகளுக்கு காரணமாக அமைந்தது.
மேலும், மூன்றாவதாக மரபணு மாற்றம் பெற்ற வைரஸ் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பருக்கும் இடையே தோன்றி இருக்க வாய்ப்புள்ளது என்றும், இறுதியாக கடந்த மாதம் பிரிட்டனில் மரபணுமாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு முந்தைய வடிவத்திற்கு, மரபுசார் தொடர்பு இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…