இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்நது மீண்டும் அதே கூட்டணியில் உருவான திரைப்படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. பிரமாண்ட பொருட்செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், வடிவேலுக்கும் சிம்பு தேவனுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து நடிகர் வடிவேலு விலகினார்.
இதனையடுத்து இயக்குநர் ஷங்கர் துவக்க செலவுகள் தனக்கு 7 கோடி ரூபாய் செலவானதாகவும், அந்தப் பணத்தை வடிவேலு நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இந்த விசாரணைக்கு வடிவேலு ஒத்துழைப்பே தரவில்லை என்பதால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ரெட் கார்டு போட்டிருந்தனர்.
தற்போது வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி தயாரிப்பாளர் சங்கம் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதியும் கொடுத்துள்ளார். புதிய படம் விரைவில் தொடங்குகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள், “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் திரு.வடிவேல் மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு. வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…
சேலம் : மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் ஜூலை 25, 2025 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும்,…