ஒரே நேரத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறிய தென் ஆப்பிரிக்க பெண் கைது!

Published by
Rebekal

ஒரே நேரத்தில் பத்து குழந்தைகளை பெற்றெடுத்ததாகக் கூறிய தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதுடைய சிதோலே எனும் பெண்மணி ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்ததாக  கூறப்பட்டது. இதில் ஏழு ஆண் குழந்தை மூன்று பெண் குழந்தை எனவும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டது. மேலும் இது உலக சாதனையாக கருதப்பட்டதுடன், உலகம் முழுவதும் பல இடங்களில் இது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அந்தப் பெண்மணியின் தோழி தனது தோழிக்கு ஏழு சிறுவர்களும் மூன்று சிறுமிகளும் பிரிட்டோரியா மருத்துவமனையில் பிறந்துள்ளதாகவும், தான் தற்பொழுது மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பிரிட்டோரியா மருத்துவமனையில் விசாரித்த பொழுது நாங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 10 குழந்தைகள் பிறந்தது என்பது விளம்பரத்திற்காகவும் நன்கொடை பெறுவதற்காகவும் கூறப்பட்டது எனது தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிதோலே கடந்த ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிதோலே என்னும் இந்தப் பெண் 10 குழந்தைகள் பெற்று எடுக்கவில்லை எனவும், தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதோலே என்னும் இந்தப் பெண்மணிக்கு 10 குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பெண்மணியின் வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், சிதோலே தனது விருப்பத்திற்கு எதிராக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்கு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனையில் கைவிலங்குடன் உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

2 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

3 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

5 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

6 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

7 hours ago