கொரோனா தொற்று அதிகரிப்பால் ஒலிம்பிக் மைதானத்தை பரிசோதனை மையமாக மாற்றிய தென் கொரியா !

Published by
லீனா

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளை குறிவைத்து தாக்கியுள்ள கொரோனா வைரஸ் நோயானது, தென்கொரியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு அரசு மேற்கொள்ளும் தீவிர நடவடிக்கை காரணமாக தினசரி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நூற்றுக்கும் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களால் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 508 பேர் பாதிக்கப்பட்டதாக தென் கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தற்போது வரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 92 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், எஞ்சிய எட்டு சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக சியோலில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானத்தை கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக பரிசோதனை மையமாக தென்கொரிய அரசு மாற்றியுள்ளது. சர்வதேச நாடுகளிலிருந்து திரும்புபவர்கள் ஆயிரம் பேருக்கு தினசரி அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகின்றன.

கடந்த மாதம் வரை அறிகுறி இருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தென் கொரிய அதிகாரிகள் சோதனை  நடத்தினர். ஆனால் தற்போது நோய்த்தொற்று அதிகரித்து அதன் காரணமாக விமான நிலையத்தில் வந்திறங்கும் அனைவருக்கும்   இந்த பரிசோதனையை செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Published by
லீனா

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

1 hour ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

2 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

2 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

3 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

3 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

5 hours ago